நண்பருடன் பைக்கில் சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்... - தருமபுரியில் அதிர்ச்சி

Update: 2024-02-23 16:28 GMT

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரூர் அருகேயுள்ள சோரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். 22 வயதான இவர், அரூர் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டி படித்து வந்த நிலையில், சம்பவத்தன்று தன் நண்பரான சாரதி என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்திருக்கிறார். இதில், மாவேரிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருவரும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில், தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த இளைஞர் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தமிழரசனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்