காவல் நிலையத்தில் வளைகாப்பு.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காவலர்கள் பாசம் | Kovai Police Station

Update: 2023-12-08 13:12 GMT

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலருக்கு, சக காவலர்கள் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் இந்து பிரியா. எட்டு மாத கர்ப்பிணியாக உள்ள இவருக்கு, கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி முன்னிலையில் சக காவலர்கள் வளைகாப்பு நடத்தினர். அப்போது திடீரென காவல் நிலையத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் இந்து பிரியாவை வாழ்த்தினார். சக காவலருக்கு அதிகாரிகள் ஒத்துழைப்புடன் வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்