த*கொலை செய்துகொண்டவர் உடலை வைத்து பேரம் பேசிய டாக்டர்கள் - அடுத்து உறவினர்கள் செய்த செயல்

Update: 2024-02-02 09:00 GMT

அரியலூரில், தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய தாமதம் செய்வதாக கூறி, அரசு மருத்துவ கல்லூரி முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பெரம்பலூர் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும், அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், பிரியா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை செய்ய தாமதம் செய்வதாகவும், 3000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் கூறி,செந்துறை சாலையில் அமர்ந்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்