வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் ... தேர்தல் அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு

Update: 2024-04-18 14:24 GMT

வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் ... தேர்தல் அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 619 வாக்குச்சாவடிகளுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் எந்திரம் உள்ளிட்டவை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. பதற்றமான 176 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு வசதிகளுடன், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி அருணா தெரிவித்துள்ளார். மேலும் வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு, துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்