பொதுத்தேர்வு எழுதும் முன் அமைச்சர் செய்த செயல் - பதற்றம் இன்றி உள்ளே சென்ற மாணவர்கள்

Update: 2024-03-01 07:41 GMT

12ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கிய நிலையில், சென்னையில் உள்ள தேர்வு மையத்திற்கு நேரில் வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். திருவல்லிக்கேணியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தேர்வுக்கான தயாரிப்பு குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்... மேலும் தேர்வு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று அறிவுரை வழங்கினார்... அமைச்சர் தைரியமூட்டியதால் பதற்றத்தில் இருந்த மாணவர்கள் மனமிலகுவாகினர்...

Tags:    

மேலும் செய்திகள்