அதிமுக நிர்வாகிகள் மீது வீடு புகுந்து தாக்குதல்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

Update: 2024-04-20 12:57 GMT

திண்டுக்கல் மாவட்டம் அகரம் அருகே, அதிமுக நிர்வாகிகள் மூவரை பேரூராட்சி தலைவர் வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடதிவருகின்றனர். கருங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ராஜமாணிக்கம், சவரிமுத்து மற்றும் ஞானமணி ஆகியோரை அகரம் பேரூராட்சி தலைவரான திமுகவை சேர்ந்த நந்தகோபால் வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. தேர்தல் பணி தொடர்பான பிரச்சினையில் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்