"எனக்கு யாருமே உதவவில்லை.." - ப்ரஸ்மீட்டில் உருக்கமாக பாலா சொன்ன வார்த்தை

Update: 2024-05-10 11:41 GMT

என் வாழ்வில் நான் கேட்கும் போது எனக்கு யாரும் உதவவில்லை... என்னிடம் கேட்பவர்களுக்கு உதவ வேண்டும் என்பது தான் ஆசை என்று நடிகர் பாலா உருக்கமாக தெரிவித்துள்ளார்... கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாலா நடனமாடி, பேசி, அறிவுரைகூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ராகவா லாரன்சின் மாற்றம் அமைப்பில் தான் இருப்பது மகிழ்ச்சி என நெகிழ்ச்சியாக தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்