திருமணத்திற்கு சென்றவர்களுக்கு நடந்த சோகம் - பறிபோன 3 உயிர்கள்

Update: 2024-04-24 12:31 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேகார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த கோபி அவரது மனைவி விஜயலட்சுமி சகோதரர் கண்ணன் ஆகிய 3 பேரும் காரில் உறவினரின் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்தனர். துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரம் அருகே கார் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்