பஸ்ஸை நிறுத்தி அட்டகாசம் செய்த போதை ஆசாமி..சவ்வு கிழிய அரைவிட்ட நடத்துனர் "வைரல் வீடியோ"

Update: 2023-10-17 11:29 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், அரசுப்பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நபரை, நடத்துநர் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கும்மிடிப்பூண்டியில் இருந்து காஞ்சிபுரம் சென்ற அரசு பேருந்தின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி, போதை ஆசாமி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்தப் பேருந்து ஓட்டுனர் மற்றும் இதர அரசு பேருந்துகளில் ஓட்டுநர்களும் ஒன்று சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், நடத்துநர் ஒருவர் போதை ஆசாமியை அறைந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .

Tags:    

மேலும் செய்திகள்