மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம்-வழக்கு பற்றிய தகவல் அளிக்காத காவலர்கள்

Update: 2023-10-10 13:53 GMT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், வழக்கு தொடர்பாக முறையாக தகவல் அளிக்காத காவலர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்த கடந்த 4-ஆம் தேதி போலீசில் புகாரளித்த நிலையில், 7-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, வழக்கை முறையாக விசாரிக்க தவறியதாக குற்றஞ்சாட்டி, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், புகார் குறித்து விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் அளிக்க தவறியதாக தனிபிரிவு காவலர்கள் இருவரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ். பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்