எய்ட்ஸ் நோய் பாதித்த 3 மாத கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Update: 2023-08-31 02:36 GMT

கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இளைஞருடன் முகநூல் மூலம் பழகியுள்ளார். அதன் பிறகு, அந்த இளைஞரையே காதலித்து திருமணம் செய்த நிலையில், இளம்பெண் 3 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை, உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். அப்போது, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இளம்பெண் சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே, கர்ப்பிணி பெண்ணிடம் தொடர்பில் இருந்த நபர்களின் விபரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்