முன்னாள் சபாநாயகர் வீட்டில் கைவரிசை - ரூ.1 லட்சம், வெள்ளி குத்துவிளக்கு திருட்டு

முன்னாள் சபாநாயகரும், அவிநாசி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-01-27 21:22 GMT
அவிநாசியை அடுத்து ராக்கியாபாளையத்தில் முன்னாள் சபாநாயகரான தனபால் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பொங்கலை முன்னிட்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள தாதக்காபட்டிக்கு சென்றிருந்தார். இதனிடையே ராக்கியாபாளையத்தில் உள்ள வீட்டில் அதிகாலை சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தனபால் மகன் லோகேஷூக்கு தெரிவித்தனர். உடனே அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்து லோகேஷ் பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 வெள்ளி குத்து விளக்குகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அங்குள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்த போது 4 பேர் கொண்ட கும்பல் இதில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்