தமிழக ஆளுநருடன் தினத்தந்தி குழும தலைவர் சந்திப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தினத்தந்தி குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், சந்தித்து பேசினார்.;
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தினத்தந்தி குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தபோது சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ஆளுநருக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, மாலைமலர் இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டிவி இயக்குநர் ஆதவன் ஆதித்தன் ஆகியோர் உடனிருந்தனர்.