"வெங்கடாசலம் தற்கொலை வழக்கில் விசாரணை : மன உளைச்சல் மரணத்திற்கு காரணமா?" - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

Update: 2021-12-04 13:21 GMT
முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெங்கடாச்சலத்தின் தற்கொலை தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருவதாகவும், ஆனால் அவர் மனைவி எந்த சந்தேகத்தையும் எழுப்பவில்லை என கூறியுள்ளார். மன உளைச்சல் தான் அவரின் மரணத்திற்கு காரணம் என்றால் அது தொடர்பான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்