பாலியல் துன்புறுத்தல் - கடும் நடவடிக்கை; "மாணவர்கள் நலன் முக்கியம்" - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் யார் தவறு செய்து இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் யார் தவறு செய்து இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில்,
பசுமை போர்வை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை தமிழக அமைச்சர்கள் ஐ பெரியசாமி மற்றும் சக்கரபாணி வழங்கினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் கல்லூரியில் நடந்த பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் யார் தவறு செய்து இருந்தாலும் சட்டவிதிகளை பின்பற்றி உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.