மதுபோதையில் ரகளை செய்த கணவன் மரணம்: மர்ம மரணம்- உடலை கைப்பற்றிய போலீசார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மனைவியிடம் ரகளை செய்தவர், வீட்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.

Update: 2021-11-06 04:01 GMT
மணலூர்பேட்டை அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்த 45 வயது வேல்முருகன், நாள்தோறும் குடிக்கும் பழக்கம் உடையவர். மதுபோதை கணவனுடன் பேசாமல் இருந்த மனைவியிடம், சம்பவத்தன்று கையில் மதுபாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்டார். இந்நிலையில், அவர், வீட்டில் இருந்தபோது திடீரென உயிரிழந்தார். மனைவி உள்ளிட்டோரிடம் அவர் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி வேல்முருகன் உடலைக் கைப்பற்றி போலீசார், உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மனைவி ஜெயாவுடன் வேல்முருகன் ரகளையில் ஈடுபட்ட காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்