இன்று கரையை கடக்கும் குலாப் புயல் - 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Update: 2021-09-26 09:32 GMT
வடகிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடலில் ஒருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவெடுத்தது. கலிங்கப்பட்டினத்தில் இருந்து 440 கிலோ மீட்டர் தொலையில் இருக்கும் புயலான இன்று வடக்கு ஆந்திரா  மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதால் கடலூரில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்