சித்த மருத்துவர்கள் பணி குறித்த அரசாணை - சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

சித்த மருத்துவர்கள் பணி குறித்த அரசாணை - சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

Update: 2021-09-14 10:48 GMT
  • சித்த மருத்துவர்கள் பணி குறித்த அரசாணை - சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவர்கள் தற்காலிகமாக பணியை தொடரும் வகையிலான அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், 2020இல் ஒப்பந்தம்  மூலம் ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவர்கள் 104 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், ஒப்பந்தம்  மூலம் தேர்வு செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் 104 பேர் பணியை தொடர வழிவகை செய்யப்பட்டிருப்பது விதிகளுக்கு எதிரானது எனவும், இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், மனுவில் வலியுறுத்தப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், மனு குறித்து தமிழக சுகாதரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. 
Tags:    

மேலும் செய்திகள்