கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : "தற்போது விசாரணைக்கு ஆஜராக முடியாது" - குற்றம் சாட்டப்பட்ட மனோஜ்சாமி தகவல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், விசாரணைக்கு ஆஜராக முடியாது, என குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜ்சாமி கூறியுள்ளார்.

Update: 2021-09-10 12:38 GMT
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக தனிப்படை அதிகாரி ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 5 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக நீலகிரி மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே வழக்கில் 9வது நபராக சேர்க்கப்பட்டுள்ள கேரள மாநிலம் திருச்சூர் கோட்டக்கரா பகுதியை சேர்ந்த மனோஜ்சாமியை விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். மேலும் அவரை கோவையில் ஆஜராக தனிப்படை போலீசார் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், தான் வசித்து வரும் கேரள மாநிலம் திருச்சூர் கோட்டக்கரா பகுதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது என்பதால் விசாரணைக்கு வர முடியாது என மனோஜ்சாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்