அடுத்த கிராம சபை கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம் - கமல்ஹாசன்

பட்ஜெட்டில் கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு நிதி ஒதுக்கி அதை விளம்பரப்படுத்த வேண்டும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரியுள்ளார்.

Update: 2021-08-02 06:54 GMT
பட்ஜெட்டில் கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு நிதி ஒதுக்கி அதை விளம்பரப்படுத்த வேண்டும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரியுள்ளார். கோவை சென்றுள்ள அவர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அதில், கிராம சபை கூட்டம் நடத்த வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2020 ஜனவரிக்குப் பிறகு கிராம சபை கூட்டங்கள் நடைபெறவில்லை என்றார். அதேபோல், பட்ஜெட்டில் கிராமசபை கூட்டங்களுக்கு எவ்வளவு நிதி கொடுக்கப்படும், எப்போது வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு விளம்பரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதால், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல நேரில் செல்லவில்லை என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்