பட்டா கத்தியால் கேக் வெட்டிய காட்சி - இரட்டையர் உட்பட 3 பேர் கைது

கும்பகோணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இரட்டையரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-13 10:05 GMT
கும்பகோணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இரட்டையரை போலீசார் கைது செய்தனர். கொரநாட்டு கருப்​பூரை சேர்ந்த இரட்டையர்கள் ராம், ரவி.  இவர்கள் தங்கள் பிறந்தநாளை கடந்த 8ஆம் தேதி இரவு கொண்டாடினர். அப்போது அவர்களுக்கு மணி என்பவர் பட்டாக்கத்தியை அன்பளிப்பாக வழங்கவே, அதை வைத்து கேக் வெட்டி உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் கேக் வெட்டிய ராம், ரவி மற்றும் பட்டாக்கத்தியை பரிசளித்த மணி என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்