மரத்தடியில் தேர்வெழுதிய மாணவர்கள் - கல்லூரியை திறக்க கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மரத்தடியில் தேர்வெழுதிய கல்லூரி மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-06 19:04 GMT
ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூடப்பட்டுள்ள, நிலையிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஆன்லையில் வாயிலாக கேள்வித்தாளை அனுப்பிய நிலையில், விடைத்தாள்களை, தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்தில் கல்லூரியில் ஒப்படைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதனால், கல்லூரிக்கு வந்த மாணவர்கள், கல்லூரியின் வெளிப்பகுதியில், மரத்தடி என ஆங்காங்கே அமர்ந்து தேர்வெழுதினர். மேலும், பெரும் சிரமத்திற்குள்ளான மாணவர்கள், கல்லூரியை திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்