'நீட் வேண்டாம்' என்ற கருத்துக்களையே இதுவரை அதிகமானவர்கள் தெரிவித்துள்ளனர் -ஆணைய தலைவர் ஏ.கே.ராஜன்

இதுவரை வந்த தரவுகளை வைத்து ஆலோசனை செய்துள்ளோம்.தரவுகளை தொடர்ந்து சேகரித்து வருகிறோம்.

Update: 2021-06-21 12:02 GMT
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ராஜன், மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்,  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து அவர் கூறியதாவது.
மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின் பேட்டி.இதுவரை வந்த தரவுகளை வைத்து ஆலோசனை செய்துள்ளோம்.தரவுகளை தொடர்ந்து சேகரித்து வருகிறோம்.பொதுமக்களிடம் இருந்து 25 ஆயிரம் கடிதங்கள் இதுவரை வந்துள்ளன.பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது.ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க முயற்சி செய்வோம்.இதுவரை வந்த கருத்துக்களில் அதிகமானோர் நீட் தேர்வு வேண்டாம் எனக்கூறியுள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்