தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-05 11:34 GMT
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல்,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல் ஆகிய பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்யும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்யு மையம்,  சென்னை மாநகரின் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடிமின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளது.  அத்துடன், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை முன்னேற வாய்ப்புள்ளது என விளக்கம் அளித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்