தொழில் நிறுவனங்கள் தடையை மீறி இயங்கினால் இழுத்து மூடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இயங்கியதே, கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-29 03:30 GMT
அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இயங்கியதே, கொரோனா தொற்று அதிகரிக்க  காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, தடையை மீறி இயங்கும் தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் என்றும் எச்சரித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்