தமிழகத்தில் ஒரே நாளில் 33,000 கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்தது.

Update: 2021-05-16 20:02 GMT
தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 15 லட்சத்து, 98 ஆயிரத்து 216ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 2 லட்சத்து 19 ஆயிரத்து 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 21 ஆயிரத்து 317 பேர் குணமடைந்துள்ளனர். 
 
Tags:    

மேலும் செய்திகள்