மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கல்யாண வைபவம்... பக்தர்கள் இன்றி நடந்த எளிய திருமணம்

மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கல்யாண வைபவம்... பக்தர்கள் இன்றி நடந்த எளிய திருமணம்

Update: 2021-04-24 07:02 GMT
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கல்யாண வைபவம்... பக்தர்கள் இன்றி நடந்த எளிய திருமணம்

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் சாஸ்திர சம்பிரதாயபடி பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.கோவில் பிரகாரத்தில் உள்ள பழைய மண்டபத்தில், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் மணக்கோலத்தில் எழுந்தருளினர். விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கி, புண்யாஹவாசனம், பஞ்ச கவ்யம், சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் ஓத, மேள வாத்தியங்கள் முழங்க மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. பின்னர், மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்