ஆக்சிஜன் அளவு இருப்பை அதிகரிக்க நடவடிக்கை - தொழிற்சாலைக்கு உடனடியாக தற்காலிக உரிமம்

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை போதுமான அளவு வைக்க, கூடுதலாக தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2021-04-19 03:53 GMT
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை போதுமான அளவு வைக்க, கூடுதலாக தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க நடவடிக்கை எடுக்க, தொழிற்துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ஆக்சிஜன் அளவை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்