கிணற்றில் மூழ்கி 3 வயது சிறுவன் பலி - சடலத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை

விழுப்புரம் அருகே கிணற்றில் மூழ்கி 3 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-04-17 21:49 GMT
அரகண்டநல்லூர் அருகே உள்ள காடகனூரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரின் 3 வயது மகன் கோபிகண்ணன் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் சேர்ந்து வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாழடைந்த கிணற்றில் சிறுவன் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. சிறவனை காணாமல் தேடிய பெற்றோர் கிணற்றில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்