நாளையுடன் விடைபெறுகிறார் சூரப்பா - துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு இல்லை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு இல்லாத நிலையில் நாளையோடு அவர் விடைபெறுகிறார்.

Update: 2021-04-10 11:46 GMT
கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்வியாளர் சூரப்பா நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும், சர்ச்சைகளும் வெடித்தன.  இந்த நிலையில் நாளையுடன், அவரது பதவி காலம் முடிகிறது. ஏற்கனவே இரண்டு பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதால், இவருக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால்,   அதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதால், நாளையுடன் அவர் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில்  பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வதற்கு உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நிர்வாக குழு, ஓரிரு நாளில் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே,   புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்