நீட் தேர்வை ஏற்க முடியாது - தமிழக அரசு

தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-10 11:39 GMT
மருத்துவ படிப்பு சேர்க்கை தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளோடு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.அதில், மருத்துவ படிப்பில் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த மாற்றங்களையும் ஏற்க முடியாது என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.ஏற்கனவே அமலில் இருக்கும் நடைமுறையே கடைப்பிடிக்கப்படும் எனவும், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்த மாட்டோம் என அரசு அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர்.
நீட் தேர்வை ஏற்க முடியாது என்பதால், அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்