வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-11 11:01 GMT
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி, அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இரு நாட்களுக்கு முன் சென்னை வந்தார். இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் சென்னை கிண்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வாக்குபதிவின் போது, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும் என கூறினார்.கொரோனா பெருந்தொற்று காரணமாக, கூடுதலாக 25 ஆயிரம் வாக்குசாவடிகள் அமைக்கப்படும் என சுனில் அரோரா தெரிவித்தார். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்களை வழங்குவது போன்றவற்றை தடுக்க உரிய நடவடிக​்​கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். முறைகேடுகளில் ஈடுபடும் கட்சிகள், மீது,பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்த விவரம் 24 மணி நேரத்தில்  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், சுனில் அரோரா தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்