தமிழக மீனவர்கள் மீது கேரள மீனவர்கள் கொடூர தாக்குதல் - கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள்

கேரள மாநிலம் கொச்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-01-23 11:50 GMT
கேரள மாநிலம் கொச்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள், கொச்சி தொப்பும்படி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடலுக்கு சென்று கரைக்கு திரும்பிய போது, கேரளாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திடீரென தமிழக மீனவர்களை மறித்து தாக்கியுள்ளனர். சுர்ளிங் என்பவரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கிய அவர்கள், தடுக்க முயன்ற அவரது மகன் சஜினையும் அடித்து உதைத்தனர். 

இதில் படுகாயமடைந்த இருவரும் கொல்லம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீனவர்கள் தாக்கப்படும் காட்சி, வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் வரும் நிலையில், தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்