"அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்" - சுயஉதவிக் குழு பெண்களுக்கு அமைச்சர் அறிவுரை

சென்னை தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா, வடபழனி அருணாச்சலம் சாலையில் நடைபெற்றது.

Update: 2021-01-09 03:34 GMT
சென்னை தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா, வடபழனி அருணாச்சலம் சாலையில் நடைபெற்றது. சுய உதவி குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பொங்கல் பரிசுகளை வழங்கி பேசினார். வரும் தேர்தலில் மகளிர் அனைவரும் வீடு வீடாக சென்று, அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்