"வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி" - திமுக தலைவர் ஸ்டாலின் முகநூல் பதிவு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-30 11:23 GMT
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.க. நடத்திய போராட்டமும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆளுநருக்கு முன்வைத்த வேண்டுகோள்களும், ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணமாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். காரணம் என்னவாக இருந்தாலும் இறுதியில் வென்றது சமூகநீதிதான் என்றும், ஸ்டாலின் மேற்கோள் காட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்