சென்னையில் என்.ஐ.ஏ., கிளை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

Update: 2020-09-28 16:14 GMT
டெல்லி, மும்பை, ஐதராபாத், கொச்சி என ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பின் 9 கிளைகள், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிதாக சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய நகரங்களில் என்ஐஏவின் கிளைகள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதம் தொடர்பான வழக்குகள், தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் முக்கியமான தகவல்கள் மற்றும் சான்றுகளை விரைந்து பெற இது உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்