"தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது" - தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என்று, தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-08-31 09:03 GMT
தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என்று, தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது என்று கூறியுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளை முதல் பொதுப் போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்