நீட் தேர்வு : பொதுபோக்குவரத்து வசதி குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Update: 2020-08-29 09:23 GMT
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 640 பயனாளிகளுக்கு அசில் கோழிக்குஞ்சுகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி கட்டணம் வசூலிக்க வற்புறுத்தும் பள்ளிகள் மீது ஒரே ஒரு பெற்றோர் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்