நைஜீரியாவில் உயிரிழந்த தமிழக இளைஞர் - தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நைஜீரியாவில் உயிரிழந்த தமிழக இளைஞரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க கோரி குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2020-08-12 14:58 GMT
நைஜீரியாவில் உயிரிழந்த தமிழக இளைஞரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க கோரி குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். புன்னக்காயல் பகுதியை சேர்ந்த வில்பன் லோபோ என்பவர் நைஜீரியாவில்  உள்ள ஒரு கப்பலில் பணிபுரிந்து வந்துள்ளார். கடலில் விழுந்து இறந்த அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு நைஜீரியாவில் உள்ள  தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்