நாளை மறுநாள் பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு
பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.;
பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு அணையைத் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 24 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் ஈரோடு, கரூர்,
திருப்பூர் மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.