பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார்

கடலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2020-08-11 12:34 GMT
கடலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற புருஷோத்தமன் என்பவர், தன்னுடைய மினிவேனுக்கு டீசல் போட்டுள்ளார். ஆனால் வாகனம் சரியாக இயங்காததால் சந்தேகமடைந்த அவர் எரிபொருளை சோதனை செய்த போது டீசலில் மண்ணெண்ணெய் கலந்திருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புருஷோத்தமன் புகார் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்