ரயில் நிலையத்தை ஆய்வு செய்த தருமபுரி எம்பி
தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகளின் கோரிக்கைகள் குறித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகளின் கோரிக்கைகள் குறித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் ஆய்வு மேற்கொண்டார். ரயில்வே நிலையத்திற்கு வரும் தார் சாலை பழுது அடைந்து இருப்பது, ரயில் பயணிகள் தங்கும் விடுதி டெண்டர் விடாமல் பயனற்று கிடப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனை ஆய்வு செய்த அவர், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.