முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட பயங்கரம் - கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - 5 பேர் கைது

கடலூரில் நடந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Update: 2020-08-02 12:44 GMT
கடலூர் அருகே உள்ள தாழங்குடா மீனவர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாசிலாமணி தரப்புக்கும், தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மதியழகன் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மதியழகனின் தம்பி மதிவாணன் வெட்டிக் கொல்லப்பட்டார். ஏராளமான படகுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள், கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 17 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ஒரு வழக்கும், 50க்கு மேற்பட்டோர் வன்முறையில் ஈடுபட்டதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான மற்றவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்