"கல்லூரிகளின் தரத்தை பிரித்து பார்ப்பதில்லை" - அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தகவல்
கல்லூரிகளின் தரத்தை பிரித்து பார்ப்பதில்லை, என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்குகின்ற 89 தனியார் பொறியியல் கல்லூரிகள் தரமற்றவை என்று ஒரு தகவல் பரவி வருகிறது என்றும், இது முற்றிலும் தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம், தரமான கல்லூரிகள், தரமற்ற கல்லூரிகள் என்ற பட்டியலை தயாரிப்பதில்லை எனவும், இது போன்ற 89 தரமற்ற கல்லூரிகள் பட்டியலை தயார் செய்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளை பாகுபாடு பிரித்து, பட்டியல் வெளியிடுவதில்லை என்றும் பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.