வனிதா விஜயகுமார் மீது சூர்யாதேவி என்ற பெண் புகார் - தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாக மனுவில் குற்றச்சாட்டு

நடிகை வனிதா விஜயகுமார் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாக சூர்யாதேவி என்ற பெண் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Update: 2020-07-16 10:55 GMT
நடிகை வனிதா விஜயகுமார் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாக சூர்யாதேவி என்ற  பெண் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பீட்டர்பால் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்தது குறித்து சூர்யா தேவி, யூ ட்யூபில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இதில் தன்னை பற்றி அவர் அவதூறு பரப்புவதாக வனிதா விஜயகுமார் போரூர் காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் மீது சூர்யாதேவி புகார் அளித்துள்ளார். தன்னைப் பற்றி வனிதா பல்வேறு அவதூறுகளை பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்