உலகையே நடுங்கவிட்ட ஆஸி. துப்பாக்கிச்சூடு - Ex கிரிக்கெட் வீரர் கண்முன் வந்துசென்ற எமன்
ஆஸ்திரேலியாவில் போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாஹன், நூலிழையில் உயிர்தப்பினார்.
திகிலூட்டும் சம்பவம் குறித்து விவரித்துள்ள அவர், தாக்குதலை தொடர்ந்து போண்டியில் உள்ள உணவகத்தில் அச்சத்துடன் தஞ்சமடைந்ததாகவும், தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அவசர மீட்புக்குழுவினர் மற்றும் பயங்கரவாதியை எதிர்கொண்ட நபருக்கு மைக்கேல் வாஹன் நன்றி தெரிவித்துள்ளார்.