அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எதிர்ப்பு - வெளி மாவட்ட, மாநில நெல்லை கொள்முதல் செய்வதாக புகார்
திருவாரூர் அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தற்காலிகமாக மூட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.