என்.எல்.சி வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு - உடல்கள் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைப்பு

என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து உயிரிழந்த 6 தொழிலாளர்களின் உடல்களும், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2020-07-01 10:03 GMT
என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து உயிரிழந்த 6 தொழிலாளர்களின் உடல்களும், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக உடல்களை எடுத்து செல்ல விடாமல் உறவினர்கள் ஆம்புலன்ஸை முற்றுகையிட்டனர். இந்நிலையில், 
என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் குறித்து முடிவு எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததின் பேரில் உடல்களை அனுப்ப உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, இறந்த தொழிலாளர்களின் உடல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்