விவசாய நிலத்தில் பழைமையான வெண்கல சிலை
ஒசூர் அருகே காடுத்தனப்பள்ளியில் விவசாய நிலத்தில் பழமையான வெண்கல பெருமாள் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒசூர் அருகே காடுத்தனப்பள்ளியில் விவசாய நிலத்தில் பழமையான வெண்கல பெருமாள் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஒரு அடி உயரமுள்ள அந்த பழமையான வெண்கல பெருமாள் சிலையை எடுத்து சென்றனர். இந்த சிலை கிருஷ்ணகிரியில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.