திருச்சியில் முதியவரை தாக்கும் காவலர் - வேகமாக பரவி வரும் வீடியோ காட்சி

திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார்.

Update: 2020-06-30 10:20 GMT
திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த காவலரின் வாகனம் ஒன்று முதியவரின் சைக்கிளில் இடித்து சேதமானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், அந்த காவலரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளாமல் முதியவரை பொது இடத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் அதிர்ந்து போன அந்த முதியவர், அடி தாங்க முடியாமல் புலம்பிக் கொண்டே தன்னுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு  செல்லும் வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறையூர் காவல்நிலைய தலைமை காவலர் இளங்கோவன் என்பது தெரியவந்தது. சாத்தான்குளம் சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள் திருச்சியில் இந்த சம்பவம் நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்